தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – விருதுநகர் கிளைக் கூட்டம் 9.7.2023 ஞாயிறு மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பயணம் சுரா வரவேற்புரை ஆற்றினார்.
மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர். த. அறம் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நீல நிலா குட்டி எழுத்தாளர்கள் சிறப்பிதழை பொ.லிங்கம் அவர்கள் வெளியிட விருதுநகர் மாவட்டப் பொருளாளர் நித்யா பெற்றுக் கொண்டார். விருதுநகர் கிளை உறுப்பினர் மங்கையர்க்கரசியின் புதல்வர் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டப்பட்டார்.
இசையரங்கில் பாடகர்கள் இராம் போ குமார், கணேசன் , கலிங்கல் சுவாமிநாதன், நாகா மற்றும் பாடகிகள் காயத்ரி, ஜெயா பாடல்களைப் பாடினார்கள். கருத்தரங்கில் மங்கையர்கரசி மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பற்றி கருத்துரை வழங்கினார்.
படைப்பரங்கில் நீலநிலா செண்பகராஜன், பயணம் சுரா, பொம்மை நாகராஜன் , தீனதயாளு கவிதை வாசித்தார்கள். பொ.நா.கமலா கட்டுரை வாசித்தார். நிறைவாக விருதுநகர் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் நன்றி கூறினார்