இயக்கச் செய்திகள்

மாவட்டக் குழுக் கூட்டம் விருதுநகர்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஒரிஸா ரயில் விபத்து மற்றும் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானம் செய்யப்பட்டது.

தோழர் பயணம் சுந்தரராஜன் வரவேறப்புரை வ்ழங்கினார்.

தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கிளை செயல்பாடுகள் குறித்து கிளைச் செயலாளர்கள் சாத்தூர் தோழர் கணேசன், விருதுநகர் தோழர் செண்பகராஜன் ,சிவகாசி தோழர் முத்து, இராஜபாளையம் தோழர் நித்தியா, பேசினார்கள்.

இராசபாளையம் பயிற்சி முகாம் மற்றும் சாத்தூர் சிறுகதை பயிற்சிப் பட்டறை குறித்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் பேசினார்.

மாநிலத் துணைத் தலைவர் தோழர் கண்மணி ராசா திருப்பூர் செயற்குழு, மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.

இராசபாளையம் விவசாயத் தொழிலாளர் மாநாடு குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் .த.அறம் பேசினார்.

நிறைவாக விருதுநகர் மாவட்டச் செயலாளர் நீதகிருஷ்ணன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version