நாட்டுப்புறக்கலைகள்

ஒயிலாட்டம்

Published

on

ஒயிலாட்டம் என்பது ஆண்கள் குழுவாக இணைந்து ஆடும் ஆட்டம். தற்போது பெண்களும் ஆடுகின்றனர். கோவில் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆட்டக்காரர்கள் சீருடை அணிந்து, காலில் சலங்கை கட்டிக் கொண்டு, வலது கையில் கைக்குட்டையுடன் ஆடுவர். பாளைத் தாளம், தவில், சிங்கி, டோலக் போன்றவை இசைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பாடப்படும் பாட்டின் இசைக்கேற்ப அடவுகளோடு இக்கலை நிகழ்த்தப்படும். பல கதைப் பாடல்களைப் பாடி ஒயிலாட்டம் நிகழ்த்துகின்றனர். அடவுகளின் வேகத்தைப் பொறுத்து தக்கு, காலம் எனப் பகுக்கின்றனர். தமிழக நாட்டார் கலைகளுள் குறிப்பிடத்தகுந்ததாக விளங்கும் ஒயிலாட்டம் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. அரசியல் பரப்புரைகளுக்கும் ஒயிலாட்டம் நிகழ்த்தப்படுகிறது. இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version