Connect with us

இயக்கச் செய்திகள்

விருதுநகர் கிளைக் கூட்டம்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – விருதுநகர் கிளைக் கூட்டம் 9.7.2023 ஞாயிறு மதியம் 3.00 மணியளவில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பயணம் சுரா வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர். த. அறம் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நீல நிலா குட்டி எழுத்தாளர்கள் சிறப்பிதழை பொ.லிங்கம் அவர்கள் வெளியிட விருதுநகர் மாவட்டப் பொருளாளர் நித்யா பெற்றுக் கொண்டார். விருதுநகர் கிளை உறுப்பினர் மங்கையர்க்கரசியின் புதல்வர் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டப்பட்டார்.

இசையரங்கில் பாடகர்கள் இராம் போ குமார், கணேசன் , கலிங்கல் சுவாமிநாதன், நாகா மற்றும் பாடகிகள் காயத்ரி, ஜெயா பாடல்களைப் பாடினார்கள். கருத்தரங்கில் மங்கையர்கரசி மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பற்றி கருத்துரை வழங்கினார்.

படைப்பரங்கில் நீலநிலா செண்பகராஜன், பயணம் சுரா, பொம்மை நாகராஜன் , தீனதயாளு கவிதை வாசித்தார்கள். பொ.நா.கமலா கட்டுரை வாசித்தார். நிறைவாக விருதுநகர் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் நன்றி கூறினார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இயக்கச் செய்திகள்

திருப்பூர் நிகழ்வு

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற
திருப்பூர் வடக்கு மாநகரம்
மாதாந்திர அமர்வுக்கூட்டம் 9-07-23 மாலை 5.00 மணிக்கு
தோழர்; எஸ்.சண்முகம் தலைமையில் திருப்பூர் கே ஆர்வி லேவுட்,திருவிக நகர் மனவளக்கலை மன்றத்தில் துவங்கி நடைபெற்றது.

வரவேற்புரையை ஆசிரியர் மேரி நிர்மலா நிகழ்த்தினார்.
மாதாந்திர வேலை அறிக்கை திருப்பூரில் ஜுன் 17, 18 தேதிகளில் நடைபெற்ற தகஇபெ மன்ற மாநில செயற்குழு, மாநிலக் குழு, தகஇபெ மன்றம்,NCBH இணைந்து நடத்திய சிறந்த படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் விழாவின் சிறப்பு குறித்து செயலாளர் எஸ்.ஏ.காதர் துவக்க உரை நிகழ்த்திச் சிறப்பித்தார்.

தகஇபெ மன்றம் மாநிலக் குழு வின் முடிவுகளையும், நிகழ்ச்சியின் சிறப்பு குறித்தும், மாநிலக் குழுவால் திருப்பூர் வடக்கு மாநகரக்கிளையின் தோழர் த.சசிகலா அவர்களை மாநில துணைச்செயலாளராக
தேர்வு செய்யப்பட்டதை
வரவேற்றும் அவருக்கு சிறப்புச் செய்யப்பட்டு
மாவட்டத் தலைவர் தோழர் பி.ஆர்.நடராசன் அவர்கள் வாழ்த்திப்பேசினார்.

நாவலாசிரியர் தோழர் த.சசிகலா அவர்கள் எழுதிய “வல்லமை தாராயோ” என்ற நூலை தோழர் P.R.நடராசன் அறிமுகம் செய்து வைக்க, தோழர்கள் அருணாசலம் ExMC வட்டாச்சியர் எல்.அருணா
தோழர் பாரதி சுப்பராயன்,
தோழர் எஸ்.ஏ.காதர்
நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

கோவை முன்னால் துணைஆட்சியர், தோழர் வெ.சுப்பிரமணியம் எழுதிய ‘அரசாட்சியில் மனசாட்சி’,என்ற நூலை,திருப்பூர் வட்டாச்சியர் திருமிகு எல்.அருணா அவர்கள் சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்துப்பேசினார்.

தோழர் பாரதிசுப்பராயன்
மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில்
கடவுள் யார்? என்ற விளக்கத்தையும்
இடதுசாரி,வலதுசாரி என்றால் என்ன என்ற விளக்கத்தையும் எளிய முறையில் புரியும்படி எடுத்து விளக்கிப்பேசினார்.

நாவலாசிரியர் சோ.தருமன் எழுதிய சாகித்திய அகடாமி விருது பெற்ற ‘சூல்’ நாவல் குறித்து தனது வாசிப்பு அனுபவத்தை
சிறந்த ஒரு கதை சொல்லி போல் நாவலை சுருக்கமாக தொய்வின்றி சிறப்பான முறையில்
முனைவர் மு.மேரிரோஸ்லின் அவர்கள் வழங்கினார்.

இன்றைய நாட்டு நடப்பு குறித்து நறுக்குத் தரித்தாற்போல் நல்ல தொரு எழுச்சிக் கவிதையை தோழர் அபுதாஹீர் நூராணி வழங்கினார்.

மூலிகையின் மகத்துவம் குறித்து நல்லதொரு கவிதையை தோழர் சுசீலாராமமூர்த்தி வாசித்தார்.

ஐம்பது கவிஞர்கள் எழுதும் நூறு கவிதைகளின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிடுவது என்றும்
இதன் தொகுப்பாசிரியர்களாக
கவிஞர் அபுதாஹிர் நூராணி,
முனைவர் மேரிரோஸ்லின்
ஆசிரியர் அ.பழனி இருப்பார்கள்.

நிகழ்ச்சியை ஆசிரியர்
அ.பழனி அவர்கள் தொகுத்து வழங்க…
தோழர்;இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Continue Reading

இயக்கச் செய்திகள்

மாவட்டக் குழுக் கூட்டம் விருதுநகர்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நீல நிலா செண்பகராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஒரிஸா ரயில் விபத்து மற்றும் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தீர்மானம் செய்யப்பட்டது.

தோழர் பயணம் சுந்தரராஜன் வரவேறப்புரை வ்ழங்கினார்.

தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கிளை செயல்பாடுகள் குறித்து கிளைச் செயலாளர்கள் சாத்தூர் தோழர் கணேசன், விருதுநகர் தோழர் செண்பகராஜன் ,சிவகாசி தோழர் முத்து, இராஜபாளையம் தோழர் நித்தியா, பேசினார்கள்.

இராசபாளையம் பயிற்சி முகாம் மற்றும் சாத்தூர் சிறுகதை பயிற்சிப் பட்டறை குறித்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் பேசினார்.

மாநிலத் துணைத் தலைவர் தோழர் கண்மணி ராசா திருப்பூர் செயற்குழு, மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.

இராசபாளையம் விவசாயத் தொழிலாளர் மாநாடு குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் .த.அறம் பேசினார்.

நிறைவாக விருதுநகர் மாவட்டச் செயலாளர் நீதகிருஷ்ணன் நன்றி கூறினார்

Continue Reading

இயக்கச் செய்திகள்

வேதாரண்யம் நிகழ்வு

Published

on

வேதாரண்யத்தில் வாங்க பேசலாம் கலை இலக்கிய அமர்வு:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கலை இலைக்கியப் பெருமன்றம் சார்பில் நடத்தப்படும் வாங்க பேசலாம் பாடலாம்… மாதாந்திர தொடர் நிகழ்ச்சி சனிக்கிழமை (08.07.2023)மாலை தொடங்கி நடைபெற்றது.

தமிழ்த்தென்றல் வளாகத்தில் நடைபெற்ற அந்த மாத அமர்வுக்கு தலைப்பு ஏதும் சொல்லாமல் வாங்க பேசலாம் … பாடலாம் என்றே குறிப்பிட்டிருந்தோம்.

தலைப்பு போடாததால் விளைந்த பலன் என்ன தெரியுமா?.அமர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டுமே முழுமையாக உணரமுடியும்.அப்படியொரு அமர்வு.

அப்பா கைய புடிச்சி நடந்தா… எப்படி இருக்கும்.அதை தனது இனிய குரலில் வடித்தார் அண்டர்காடு சுந்தேரேச விலாஸ் பள்ளியில் நான்காவது படிக்கும் நி.மதன்.

பூவூல வாசமில்ல… பொண்ணு மனசில நேசமில்ல…- என்ற பாடலை 60 -வயதை கடந்த தேத்தாக்குடி காசிநாதன் புதிய வரவாக நின்று பாடி அசத்தினார்.

இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் கவிதையை அண்ணாப்பேட்டை கவிஞர் செளமியாவும், பெண்ணிய பாகுபாட்டினை வெளிக்கொணரும் கவிதையை தேத்தாக்குடி அரசுப் பள்ளி மாணவி சுதாவும் வடித்தனர்.

நிகழ்வில்,10 ஆம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட நிலையில் முதலிடத்தையும்,அரசுப் பள்ளிகள் அளவில் மாநில நிலையில் 2-வது சிறப்பிடத்தையும் பெற்றுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளி மாணவி அ.லெட்சுதா பாராட்டப்பட்டார்.

கலையின் வழியே கற்ற அந்த மாணவியும் அன்புள்ளம் கொண்ட அம்மாவுமாவுக்கு…பாடலை பாடி அசத்தினார்.

எதை பேசுவதென்று தலைப்பே இல்லாத நிலையில், அரங்கில் பதிவான கருத்துகள்தான் வியக்கச்செய்தது.குடிநீரில் மலத்தைக் கழிப்பதும்,மனிதன் மீது சிறுநீர் கழிப்பதும் பண்பாட்டு சீரழிவின் உச்சம் என்பதை பலரும் பேசினர்.

மனித நாகரிகம் தோன்றிய நதிக்கரையின் இன்றைய நிலை…, தக்காளி விலை…,சினிமாவின் தாக்கம்,வளர்ச்சி, ஏமாற்றம்… இப்படி பல விடயங்களை பலரும் பேசினர்.

பாலின நிகர்நிலையில் தொடரும் சமூக அவலங்களை ஆர்வலர் வசந்தி செல்வகுமார் விவரித்தார்.நிகழ்ச்சி குறித்த கருத்துகளை பதிவிட்ட அவர்,பல வேலைகளுக்கு மத்தியில் மணிக்கனக்கில் அமர்வில் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

இந்த அமர்வில் கிடைத்திட்ட பதிவுகள் தனக்கு 2 மாதத்துக்கான புதிய சக்தியை கொடுப்பதாகக் கூறியபோது கரங்கள் ஒலித்தது.உண்மையில் பெருமன்றத்துக்கு கிடைத்திருக்கும் இந்த மனிதியின் வரவு மகிழ்ச்சி தருகிறது.

இப்படியாகவே இந்த அமர்வில் பலரின் பேச்சு நல்ல, தைரியமான பதிவுகளாக அமைந்தது.

வாட்சாப்பில் மட்டுமே பகிரப்பட்ட தகவலை ஏற்று வழக்கம்போல ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், கவிஞர்கள் படைப்பாளிகள் என நிகழ்வில் பங்கேற்ற ஆர்வலர்களின் முகங்கள் புதிய நம்பிக்கையை தந்தது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி, இந்த முறை தகவல் பகிர்ந்ததில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் களையப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலான எண்ணிக்கை வந்திருக்கும். இந்த நிலையிலும் வருகை தந்தவர்களுக்கும் ,இடம் அளித்து, தேநீர் கொடுத்து வாய்ப்பளித்த கவிஞர் புயல், வடை கொடுத்த வை.ப.சாரதி ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்போம்.

மேலும், பத்திரிக்கைகளுக்கான செய்தியையும் இத்துடன் இணைக்கிறேன்.

வேதாரண்யம், ஜூலை 9:

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய அமர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

வேதாரண்யம் தமிழ்த்தென்றல் வளாகத்தில் வாங்க பேசுவோம்,பாடுவோம் என்ற அமர்வாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத்தின் கிளைத் தலைவர் இள.தொல்காப்பியன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் புயல் சு.குமார்,மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி,
கிளைச் செயலாளர் தங்க.குழந்தைவேலு,பொருளாளர் சு.பாலாஜி,ஆய்வு மாணவி த.சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்,நான்காம் வகுப்பு மாணவன் மதன்,தேத்தாக்குடி என்.காசிராஜன், சர்வகட்டளை லெட்சுதா ஆகியோர் மண்ணின்பாடல்களை பாடினர்.கவிஞர்கள் செளமியா,சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண் எடுத்து மாவட்ட நிலையல் முதலிடமும் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் பள்ளி மாணவி அ.லெட்சுதா உள்பட இளம் படைப்பாளர்கள் பாராட்டப்பட்டனர்.

நிகழச்சியில்,ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மு.ராஜசேகரன்,அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி,பேராசிரியர் ப.பிரபாகரன்,வழக்குரைஞர் ராமஜெயம்,ஆசிரியர்கள் முத்தரசு,சு.பாஸ்கரன்,ஜெய.கந்தசாமி,செந்தில்நாதன், அமிர்தலிங்கம்,எழிலரசன்,சமூக ஆர்வலர் வசந்திசெல்வகுமார், நல்லாசிரியர்கள் வீ.வைரக்கண்ணு,எஸ்.செல்வராசு,கவிஞர்கள் ஈஸ்வரமைந்தன், லெ.பக்கிரிசாமி, இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.